Showing posts with label பள்ளு பாடல். Show all posts
Showing posts with label பள்ளு பாடல். Show all posts

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

சந்த நயம் பொருந்திய பாடல்கள் பள்ளு பாடல்கள். இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பே, சுதந்திரம் அடைந்துவிட்டதாக கருதி, பாரதியார் அவர்கள் பாடிய மிக பிரபலமான 'பள்ளர் களியாட்டம்' இதோ.

சுதந்திரப் பள்ளு பள்ளர் களியாட்டம்
ராகம்-வராளி
தாளம் - ஆதி

பல்லவி
ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே; 
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று

சரணங்கள்

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப் 
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை 
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை 
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடுவோமே)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம் 
எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு; 
சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத் 
தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே (ஆடுவோமே)
Source:  http://bharathipaadal.our24x7i.com/bharathiar_kavithaigal/243/49.jws


நேற்று (28 - 07 -2013) காலை விஜய் தொலைக் காட்சியில் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட நடுவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை கண்ணன் -- பிள்ளைமார்
எஸ்.ராமகிருஷ்ணன் -- கள்ளர்
மோகன்ராம்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடல் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, நெல்லை கண்ணன் கேட்டார்.

நெல்லை கண்ணன்: "ஏம்மா....இந்த பாடல் யார் பாடுவதாக அமைந்து இருக்கிறது தெரியுமா...?"
பங்கேற்ற பெண்: "டி.கே.பட்டம்மாள்"
நெல்லை கண்ணன்:"அதை கேட்கவில்லை. இந்த பாடல் எந்த மக்கள் பாடுவதாக அமைந்துள்ளது தெரியுமா...?"
பங்கேற்ற பெண்: "தெரியாது...."
நெல்லை கண்ணன்: "இன்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கும் பள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் பாடுவதாக இந்த பாடல் அமைந்து உள்ளது."

குறிப்பு: நெல்லை கண்ணன் அவர்களின் மகன் 'தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்துடன்' நெருங்கிய தொடர்பில் உள்ளார். வாய்ப்பு கிடைத்தால், இதே நெல்லை கண்ணன் அவர்கள் வரும் காலத்தில், 'பள்ளர் தாழ்த்தப்பட்டோர் அல்ல என்றும், அவர்களே இந்த மண்ணின் மூத்த குடிகளும், மூவேந்தரின் வாரிசுகளும் ஆவர்' என்றும் சொல்ல வாய்ப்பு உண்டு. அந்த பயணத்தை நோக்கி இனிதே 'தா.வ.ஆ.ந'....!!!



ஆட்சியாளர்களின் வரலாற்று திரிப்பு - 1

வரலாறு தெரியாத முதல்வர் 

வரலாற்றோடு மறுக்கும் செந்தில் மள்ளர்


    தற்போதைய தமிழக முதல்வர் அவர்கள் 'நாடர்கள் மூவேந்தர் மரபினர்' என்று திருவாய் மலர்ந்து அருளியதற்க்கு, 'மள்ளர்கள்' சார்பில் செந்தில் மள்ளர் அவர்கள்  'இந்தியன் ரிப்போர்டர்' வார இதழுக்கு (1 திசம்பர் 2012) அளித்துள்ள கட்டுரை இங்கே பிரசுரிக்கப் பட்டுள்ளது. வாசிப்பதற்கு இலகுவாக, அந்த கட்டுரை இங்கே தட்டச்சு செய்யப்பட்டு பதிப்பிக்கப் பட்டுள்ளது.


    மத்திய அரசின் பாட புத்தகத்தில் நாடார்கள் பற்றிய தவறான கருத்துக்கள் இருப்பதாக பெரும் போராட்டமே கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நடந்தது. இதை முடித்துவைப்பதாக நினைத்து இன்னொரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.


    மத்திய பாடத்திட்டத்தில் நாடார்கள் இழிவுப் படுத்தப் பட்டிருப்பதைப் பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா, 'தமிழ் நாட்டை ஆண்ட பரம்பரையான நாடார்களை கேவலப்படுத்தியிருக்க கூடாது' என்று சொல்லி இருந்தார்.






   இதற்க்கு காட்டமாக விளக்கம் அளிக்கிறார் 'மள்ளர் மீட்புக் களத்தின்' நிறுவனர் கு.செந்தில் மள்ளர்.


    'நூற்றாண்டு கால நாடார் சமூகத்தின் வீரம் செறிந்த சமூக விடுதலைப் போராட்டத்தை மதிக்கிறோம். தலை வணங்குகிறோம்.பல்துறைகளிலும் நாடார் சமூகத்தின் நிகரற்ற வளர்ச்சி கண்டு மிக மகிழ்ச்சி அடைகின்றோம். நாடார் சமூகத்தை போல, எல்லா தமிழ் சமூகங்களும் முன்னேற வேண்டும் என்பதே எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் விருப்பமாகும்.


    நாடார் சமூகத்தை இழிவுபடுத்தும் செய்தியைப் பாடப்புத்தகத்தில் அரசே இடம்பெறச் செய்ததென்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது தான். நாடார் சமூகத்தை மட்டுமல்ல;எந்தவொரு சமூகத்தையும் இழிவுபடுத்துவதேன்பது கண்டனத்துக்குரியது.இதற்காக நீதி கேட்டு முதல்வர் செயலலிதா முன்வந்திருப்பதைப் பாராட்டுகின்றோம்.


   இந்த ஆண்டு காவல்துறை ஆய்வாளர் ஆல்வின் சுதன் என்பவர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப் பட்டார்.ஒரு காவல் துறை அதிகாரி கொல்லப் பட்டும், இரு காவல் துறையினர் கத்தியால் குத்தப் பட்டும், தமிழக முதல்வர் துப்பாக்கி சூடு நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிடவில்லை. அந்த சமூக விரோதிகளை வெளிப்படையாக கண்டிக்க கூட முன்வராத தமிழக முதல்வர் செயலலிதா, ஆல்வின் சுதன் நாடார் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அந்த சமூகத்தை திருப்திபடுத்த வரலாற்றைத் திரிக்கும் வேலையைச் செய்துள்ளார்.


    'சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள் தான் நாடார் சமூகத்தினர் என்று' எந்த வித சான்றுகளும் இன்றி செயலலிதா கூறியிருப்பது, அவரின் வரலாற்று அறியாமையையே காட்டுகிறது. நாடார்களையும், சேர,சோழ,பாண்டிய மரபினர்களான மள்ளர்களையும் அறிவுத்தளத்தில் மோதவிடும் ஆரிய சூழ்ச்சியாகவே இதனைப் பார்க்க முடிகிறது. இதன் மூலம் ஏதோ ஒரு அரசியல் காரணத்திற்க்காக மள்ளர்,நாடார் சாதி கலவரத்தை உண்டு பண்ண செயலலிதா முயற்சிப்பதாகத் தெரிகிறது.


    உலகிலேயே வளங்களுக்கேற்ப நிலங்களை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை எனப் பாகுபடுத்தி,இலக்கணப் படுத்தியவர்கள் தமிழர்கள். அதில் மருத நிலா மக்களின் மரபுப் பெயரே 'மள்ளர்' என்பதாகும். 'மள்ளர்' என்பதற்கு 'உழவர்' என்றும், 'வீரன்' என்றும் தமிழ் அகராதிகள் பொருள் கண்டுள்ளன.


    'அருந்திறல் வீரர்க்கும் பெருந்திரள் உழவர்க்கும்
    வருந்தகையத்தாகும் மள்ளர் எனும் பெயர்' 


  என்பது திவாகர நிகண்டு வகுத்த இலக்கணம் ஆகும். இவ்வாறே 'மள்ளர்' என்ற சொல்லிற்கு பிங்கல நிகண்டும், வடமலை நிகண்டும்,சூடாமணி நிகண்டும் இலக்கணம் வகுத்துள்ளன.


    எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்ற 'மள்ளர்களே' இன்றைய 'பள்ளர்கள்' என்பதை
* டி.கே. வேலுப்பிள்ளை
* ஞா.தேவநேயப் பாவாணர்
* சோ.இலக்குமிதரன் பாரதி
* எம்.சீனிவாச ஐயங்கார்
* எ.வி.சுப்ரமணிய அய்யர்
* வீரமா முனிவர்
* கச்சியப்ப முனிவர்
* திருவாடுதுறை ஆதீனம்
* ந.சேதுரகுனாதன்
* ஈக்காடு ரத்தினவேலு முதலியார்
* இரா.தேவ ஆசீர்வாதம்
* பேராசிரியர். குருசாமி சித்தர்
* பேராசிரியர். தே.ஞான சேகரன்
* அறிஞர் குணா
* மேலைநாட்டு அறிஞர் முனைவர் வின்சுலோ
* மேலைநாட்டு அறிஞர் சி.ஒப்பார்ட்
* கே.ஆர்.அனுமந்தன்
* யாழ்ப்பாணத்து அறிஞர்களான ந.சி.கந்தையாப் பிள்ளை
* பண்டித சவரிராயர்
ஆகிய அறிஞர்கள் ஆய்ந்தறிந்து கூறியுள்ளனர். 


* சேலம் மாவட்ட குடிக்கணக்கும் (1961)
* கேரளா பண்பாட்டு வரலாற்று நிகண்டும்
  மள்ளர்களே 'பள்ளர்கள்' என்று பதிவு செய்துள்ளது.


    பள்ளர் என்னும் மள்ளர்களே 'பாண்டிய மரபினர்' என்பதை முக்கூடற்ப் பள்ளு (செய்யுள்: 91), திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு (செய்யுள் 35,149,159), திருமலை முருகன் பள்ளு ,ஏழு நகரத்தார் பேரிற் பள்ளு (செய்யுள்: 3,4,7,8,13,14), வேதாந்தப் பள்ளு (செய்யுள்: 35), பறாளை விநாயகப் பள்ளு (செய்யுள்: 79), மேரூர் நல்லபுள்ளியம்மன் பள்ளு, தென்காசைப் பள்ளு, கட்டிமகிபன் பள்ளு, செங்கோட்டுப் பள்ளு ஆகிய பள்ளு இலக்கிய செய்யுள்கள் மூலம் அறிய முடிகிறது.


       மருத நில ஆறுகளிலும், குளங்களிலும்,கண்மாய்களிலும்,வயல்களிலும் மள்ளர்களின் வாழ்வியலோடு மீன்களும் இருப்பதாலும், வானத்து மீன்களைக் கொண்டே பருவ காலங்களைக் கணக்கிட்டுப் பயிர் செய்கையை மேற்கொண்டதாலும், மள்ளர் குலத்தவர்கலான பாண்டியர்களுக்கே மீன் சின்னம் வாய்த்தது.


    வீரபாண்டிய புரம், சுந்தர பாண்டிய புரம்,திருநெல்வேலி மாவட்டத்தில் அழகிய பாண்டிய புரம், சுந்தரபாண்டிய புரம், தூத்துக்குடி மாவட்டத்தில் பராக்கிரம பாண்டி,புதூர் பாண்டியாபுரம், போன்ற பாண்டியர் பெயர் தாங்கிய பள்ளர் ஊர்களே, பள்ளர்களே பாண்டிய மரபினர் என்பதை உறுதி செய்கின்றது.


    பாண்டியர்களின் கடைசிப் போர் கயத்தாறில் நடக்கிறது. போரின் முடிவில் பாண்டியர்களும், அவர்தம் உறவினர்களும்,மேற்கு நோக்கி சென்று பொதிகை மலையில் தஞ்சம் அடைகின்றனர். பின்னாளில் பொதிகள் மலையில் இருந்து கீழிறங்கிய பாண்டியர்கள் வழி வாழ்ந்த பள்ளர்களே இன்று செங்கோட்டை,தென்காசி வட்டங்களில் 'பாண்டியர் குல விவசாயம்' என்ற நில ஆவணத்தொடும், 1924 இல் 'பாண்டியர் சங்கம்'  தொடங்கியும், 09.03.1946 இல் 'பாண்டியர் சங்க மாநாடும்' நடத்தியுள்ளனர். அப்பகுதிப் பள்ளர்கள் இன்றும் தங்களைப் 'பாண்டியர் சமுதாயம்' என்றே அழைத்தும், அடையாள படுத்தியும் வருகின்றனர்.


    வரலாற்று பெருமையும், பண்பாட்டு சிறப்பும் கொண்ட மள்ளர்கள் மீது கடந்த ஒரு நூற்றாண்டாக அரிசனன்,ஆதி திராவிடன்,தாழ்த்தப் பட்டவன், தலித் என்ற இழிவுப் பெயர்களை வலியத் திணிக்கும் போக்கினை திராவிட கட்சிகளும், அதன் ஆட்சியாளர்களுமே செய்து வருகின்றனர். வெண்ணைத் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போல, தமிழ்தேசிய ஓர்மை பொங்கி வருகின்ற இக்கால கட்டத்தில், முதல்வர் செயலலிதா மள்ளர்,நாடார் ஆகிய தமிழ்சாதிகளை சீண்டி விடுவதை தமிழின உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும்.


    வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வது முதலமைச்சரோ, நீதிபதியோ செய்ய வேண்டிய வேலை அல்ல. தமிழக முதல்வர் தமிழர் வரலாற்றை திறக்கின்ற வேலையை விட்டு விட்டு வரலாறு உண்மையைத் தெரிந்து கொண்டு பேசுவது நல்லது' என்கிறார் செந்தில் மள்ளர்
.


பின் இணைப்பு:
நாடார் சமுதாய மக்கள் பற்றி முதல்வர் அளித்துள்ள அறிக்கையின் பத்திரிகை ஆதாரங்கள்:

தேவேந்திரன் சக்ரவர்த்தி: ஊர் குடும்பு ஆட்சி முறை

ஊர் குடும்பு ஆட்சி முறை - அன்றும் இன்றும்


         மருத நிலத்தில் தோன்றிய ஊர்க்குடும்பு ஆட்சிமுறை களத்து மேட்டை நடுவமாகக் கொண்டெழுந்த காணியாட்சி முறையாகவே தொடக்கத்தில் இருந்தது. எனவே தான் நெல் விளைவிக்கப்படும் நிலங்களின் தொகுப்பிற்கு 'குடும்பு' என்று பெயர் ஏற்ப்பட்டது. குடியிருப்பதற்காக மக்களிடம் இருந்து மன்னர்களால் பெறப்பட்ட வரிக்கு 'குடிமை' என்று பெயர். சோழர் காலத்தில் தோட்ட வாரியம், கழனி வாரியம், ஏரி வாரியம் எனத் தனித்தனி அமைப்புகள் இருந்ததைப் போன்று 'குடும்பு வாரியம்' என்றொரு தனி அமைப்பும் இருந்து இயங்கி வந்துள்ளது. இதில் பணி புரிந்தவர்கள் 'குடும்பு வாரியப் பெருமக்கள்' என்று அழைக்கப் பெற்றனர்.


       காஞ்சிபுரம் வட்டம், மணி மங்கலம் கல்வெட்டில் 'குடும்பிடு பாடகம்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. குடும்பிடு பாடகம் என்பது நிலப் பெயர் ஆகும். குடும்பு செய்வதற்கான நிலம் குடும்பிடு பாடகம் என்றானது. குடும்பர்களுக்கு உரிமையுடைய நிலம் குடும்பிடு பாடகம் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாகேசுவர சாமி கோயில் கருவறையின் தெர்க்குச் சுவரில் உள்ள கல்வெட்டு முதல் பராந்தக சோழனின் 40 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. (கி.பி.947 ) இக்கல்வெட்டில் 'குடும்பு காட்டுக்காற் குடும்பி' என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.


      களத்து மேட்டைக் கவனிக்கவும், விளை பொருட்களைக் கள்ளர்களிடம் இருந்து காக்கவும், ஏர் மள்ளர்களான குடும்பர்களுக்குத் துணையாகப் போர் மள்ளர்களான காலாடிகள் விளங்கினர். ஏர்க்கள நிருவாகத்தொடு போர்க்கள நிருவாகமும் இணைந்தபோது குடும்பன் காலாடி ஆட்சி முறையான மூவேந்தர்களின் அடிப்படை ஆட்சிமுறை தோன்றியது. குடும்பர்களுக்கு உதவியாக இருந்த காலாடிகளுக்குப் பதிலாக சில இடங்களில் வாரியார்கள் இருந்தனர். வாரியன் என்ற சொல்லே பின்னாளில் வாதிரியான் எனத் திரிந்தது. வாதிரியான் என்பது தற்போது 'வாத்திரியான்' என்று திராவிடத்தால் திரிக்கப் பட்டுள்ளது. வாதிரியான் என்பது பட்டியல் சாதிகளில் அகர வரிசை எண்.72 இல் உள்ளது.

இடைக்கால சோழர் ஆட்சியில் குடும்பு முறை

     குடும்பு என்னும் சொல்லாட்சி வரலாற்றில் தொன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து இடம் பெற்று வருவதைக் காண முடிகிறது. பாண்டிய மன்னர்கள் ஏற்ப்படுத்திய குடும்பிய முறை பின்னர் சோழர்களிடமும், சேரர்களிடமும் வழக்கில் இருந்தது. ஊர்க்குடும்பு ஆட்சிமுறையை உலகிற்கு உணர்த்துவதற்கு உரிய சான்றாக நிப்பது உத்திரமேரூர் கல்வெட்டாகும். இக்கல்வெட்டின் மூலம் இடைக்கால சோழர் ஆட்சி குடும்பு முறை செயல்பட்டதைப் பற்றிப் பார்ப்போம்.


உத்திரமேரூர் கல்வெட்டு - 1 
தேவேந்திரன் சக்ரவர்த்தி
ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பாரந்தக சோழர் காலம்


அ) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரிவன்மர்க்குயாண்டு பனிரெண்டாவது   உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம். இவாண்டு முதல் எங்கள் ஊர் ஸ்ரீ முகப்படி ஆணை.


ஆ) இதனால் தத்தனூர் மூவேந்தர் வேளாண் இருந்து வாரியம் ஆக ஆட்டொருக் காலம் சம்வத்சர வாரியமும், தோட்ட வாரியமும், ஏரி வாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்.


இ) பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி கானியத்துக்கு மேல் இறை நிலம் உடையான் தன மைனயிலே அ.


ஈ) கம் எடுத்துக் கொடன்னு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும், சாஸ்த்திரத்திலும், காரியத்திலும் நிபுணர் எனப் பட்டி.


உ) ருப்பாரை அர்த்த சௌசமும் ஆத்மா சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதார் வாரியம் செய் தொழிந்த பெருமக்களுக்கு


ஊ) அணைய பந்துக்கள் அல்லாதாரை குடவோலைக்கு பேர் தீட்டி சேரி வழியே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராம் ஆறு ஏதும் உருவறியாதான் ஒரு


எ) பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்து பன்னிரு வருசம் சம்பத்ஸர வாரியம் ஆவதாகவும் அதன் பின்பே தோட்ட வாரியத்துக்கு மேல்படி குடவோலை


ஏ) லை வாங்கி பன்னிருவரும் தோட்ட வாரியம் ஆவதாகவும் நின்ற அறு குடவோலையும் ஏரி வாரியம்


ஐ) வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியமும், முந்நூற்று அறுபது நாளும் நிரம்ப வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவவியவஸ்தை ஒலைப்படியே குடும்புக்கு குடவோலையிட்டு குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியம் செய்தார்க்கு பந்துக்களும் சேரிகளில் அனோன்யமே அவரு


ஒ) ம். குடவோலையில் பேர் எழுதி இடப் படாதார் ஆகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்பது பன்னிருவரிலும் அறுவர் பஞ்சவார வாரியம் ஆவதாகவும் சம்வத்சர வாரியம் அல்லாத


ஓ) வாரியங்கள் ஒரு கால் செய்தாரை பிள்ளை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெராததாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவர் ஆகிய பரகேசரி வர்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட


ஓள) ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தனூர் மூவேந்த வேளாண் உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கேட்டு கிஷ்டர் வர்த்த்திதிடுவாராக வியவஸ்தை  செய்தோம் உத்திர மேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையோம்.


உத்திரமேரூர் கல்வெட்டு - 2 
அ ) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரி வன்மர்க்கு யாண்டு பதினாலாவது நாள் பதினாறு காலியூர் கோட்டத்து தன கூற்று உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்து சபையோம். இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமானடிகள் எம்பெருமான் ஸ்ரீ வீர நாராயணன் ஸ்ரீ பராந்தக தேவன் ஸ்ரீ பரகேசரிவன் மருடைய ஸ்ரீ முகம் வரக்காட்ட ஸ்ரீ முப்படி ஆ


ஆ) ஞஞையினால் சோழ நாட்டுப்புறங் கரம்பை நாட்டு ஸ்ரீ வாங்க நகரக்கரஞ் செய்கை கெண்ட யக்ரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமாள் இருந்து வாரியமாக ஆட்டொ ருக்காலும்  சம்வத்சர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும், இடுவதற்கு வியவஸ்தை செய் பரிசாவது குடும்பு முப்பதா முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலா


இ) ரே கூடிக் காணிலத்துக்கு மேல் இறை நிலமுடையான் தன மனையிலே அகம் மெடுத்துக் கொண்டிருப்பானை எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்ப்பட்டார் மந்த்ர பிராமணம் வல்லான் ஒதுவித்தறிவானைக் குட வோலை இடுவதாகவும் அரக்கா நிலமே யுடையனாயிலும் ஒரு வேதம் வல்லனாய் நாலு பாஷ்யத்திலும்  ஒரு பா


ஈ) ஷ்யம் வக காணித்தறிவான அவனையுங் குட வோலை எழுதிப் புக இடுவதாகவும் அவர்களிலும் கார்யத்தில் நிபுணராய் ஆகாரமு டையாரானாரை யேய் கொள்வதாகவும் அர்த்த சௌசமும் ஆன்ம சௌசமும் உடையாராய் மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்து கணக்குக் காட்டாதே இருந்தாரையும் இவர்களுக்குச் சிற்றனவர் பேரவ்வை


உ) க்களையும், அவர்களுக்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்குத் தாயோடு உடப் பிறந்தானையும் இவர்கள் தகப்பநோடுப் பிறந்தானையும் தன்னோடுப் பிறந்தாளை வோட்டானையும் உடப் பிறந்தாள் மக்களையும் தன மகளை வேட்ட மருமகனையும் தன தமப்பனையும்


ஊ) தன மகனையும் ஆக இச்சுட்ட.....பர்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும், அகமியாகமனத்திலும் மகா பாதங்களில் முன் படைத்த நாலு மகா பாதகத்திலுமெழுத்துப் பட்டாரையும் இவர்களுக்கும் முன் சுடப்பபட்ட இத்தனை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும் சம சரக்க பதிதாரை பராஸ்யசித்தஞ் செய்யுமளவும்


எ) குடவோலை இடாததாகவும்....தியும், சாகசிய ராயிரைப்பாரையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் பரத்ரவியம் அபகரித் தானையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் எப்பேர்ப்பட்ட கையூட்டுங் கொண்டான் க்ரத பிராயஸ் சித்தஞ் செய்து சுத்தரானாரையும் அவ்வவர் ப்ராணாந்திகம் 


ஏ) வாரியத்துக்கு குடவோலை யெழுதிப் புகவிடப் பெருந்தாகவும் .... பாதகஞ் செய்து பிராயச் சித்தர் செய்து சுத்தரானாரையும் கிராம கண்டகராய் ப்ராயஸ்சித்தஞ் செய்து சத்தரானாரையும் அகமியாங்கமஞ் செய்து ப்ராயஸ்சித்தஞ் செய்து சுத்தரானாரையும் ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் ப்ரானாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை எழுதி எழுதிப்புகவிடப் பெருதாக


ஐ) வும் ஆகா இச்சுட்டப்பட்ட இத்தனைவரையும் நீக்கி இம்முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி இபன்னிரண்டு சேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறே வாயோலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே கட்டிக்குடம் புக இடுவதாகவும் குடவோலை பறிக்கும் போது மகா சபைத் திருவடியாரை சபால விருத்தம் நிரம்பக் கூட்டிக் கொண்டு அன்றுள்ளீரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியா


ஒ) மே மகா சபையிலேரும் மண்டகத்தி லேயிருத்திக் கொண்டு அந்நம்பிமார் நடுவே அக்குடத்தை நம்பிமாரில் வருத்தராய் இருப்பா ரொரு  நம்பி மேல் நோக்கி எல்லா ஜனமுங் காணுமாற்குலெடுத்துக் கொண்டு நிற்க பகலே யந்திர மறையாதானொரு பாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி மற்றொரு குடத்துகே புகவிட்டுக் குலைத்து அக்குடத்திலோரோலை வாங்கி மத்யஸ்தன் கையிலே


ஓ) குடுப்பதாகவும் அக்குடத்த வோலை மத்தியஸ் தன வாங்கும்போது அஞ்சு விரலும் அகல வைத்த உள்ளங்கையாலே ஏற்றுக் கொள்வானா கவும் அவ்வேற்று வாங்கின வோலை வாசிப்பானாகவும் வாசித்த அவ்வோலை அங்குள் மண்டகத்திருந்த தம்பிமார் எல்லோரும் வாசிப்பாராகவும் வாசித்த அப்பர் திட்டமிடுவதாகவும் இப்பரிசே முப்பது குடும்பிலும் ஒரே பேர் கொள்வதாகவும் இக்கொண்ட முப்பது பேரினுந்தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் செய்தாரையும் விச்சையா வருத்தரையும்


ஓ) வயோவ்ருத்தர்களையும் சம்வத்ஸர வாரியராக கொள்வதாகவும் மிக்கு நினாருட்பன்னிருவரைத் தொட்ட வாரியங் கொள்வதாகவும் நின்ன அறுவரையும் ஏரி வாரியமாகக் கொள்வதாகவும் இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப் பெருமக்களும் முன்னுற்றருபது நாளும் நிரம்பச் செய்து ஒழிவதாகவும் வாரியஞ் செய்ய நின்றாரை அபராதங்


ஐ) கண்டபோது அவனை யொழித்துவதாகவும் இவர்கள் ஒழித்த அனந்தரமிடும் வாரியங்களும் பன்னிரண்டு சேரியிலும் தன்மைக்ருதயங் கடை காணும் வாரியரே மத்யஸ்தரைக் கொண்டு குறிகூட்டிக் குடுப்பராகவும் இவ்வியவஸ்தை யோலைப்படியே...க்ருக்குடவோலை பரித்தக் கொண்டே வாரியம் இடுவதாகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்து.


ஓ) க்கு முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி முப்பது வாயோலை கட்டும் புக இட்டு முப்பது குடவோலை பறித்து முப்பதிலும் பன்னிரண்டு பேர் பறித்துக் கொள்வதாகவும் பறித்த பன்னிரண்டு பேர் அறுவர் பொன் வாரியம் அறுவர் பஞ்ச வாரியமும் ஆவனவாகவும் பிற்றை ஆண்டும் இவ்வரியங்களை குடவோலை பறிக்கும் போது இவ்வரியங்களுக்கு முன்னம் செய்


ஓ) த குடும்பன்றிக்கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொள்வதாகவும் கழுதை ஏறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப்புக் இடப் பெருததாகவும் மத்தியஸ்தரும் அர்த்த சௌசமுடையானே கணக்கெழுது வானாகவும் கணக்கெழுதினான் கணக்குப் பெருங்குறிப் பெருமக்களோடு கூடக் கணக்குக் காட்டி சுத்தன் ஆச்சி தன பின்னன்றி மாற்றுக் கண


ஓள) க்குப் புகழ் பெருதானாகவும் தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் மாற்றுக் கணக்கர் புக்கு ஒடுக்கப் பெருதாராகவும் இப்பரிசே இவ்வாண்டு முதல் சந்த்ராதித்யவத் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி பட்டிதவச்சவன் குஞ்சர மல்லன் சூரா சூளாமணி கல்பகசரிதை ஸ்ரீ பரகேசரிபன்மர்கள் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக் காட்ட ஸ்ரீ ஆளஞயா


அக்கு) ல் சோழ நாட்டு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்ட யாக்ரமவித்த பாட்டனாகிய சேர்மாசி பெருமானுடன் இருந்து இப்பரிசு செய்விக்க நம் கிராமத்து அப்யுதயமாக துஷ்டர் கேட்டு விசிஷ்டர் வர்த்திப்பதாக வியவஸ்தை செய்தோம் உத்தரமேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையாம் இப்பரிசு குறியுள் இருந்து பெருமக்கள் பணிக்கு வியவஸ்தை மத்யஸ்தன்


அ) காடாடிப் போத்தன் சிவகுறி இராஜமல்ல மங்கலப்பிரியனேன்.


       குடும்பு ஆட்சியில் குடவோலை முறை குறித்து மேற்கண்ட உத்திரமேரூர் கல்வெட்டு உணர்த்துகிறது. மேலும் இக்கல்வெட்டு இராசராசச் சோழனை தேவேந்திரன் சக்ரவர்த்தி குஞ்சர மல்லன், இராசமல்லன் எனவும் குறித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

குடும்பு வாரியம்

    திருப்பாற்கடல் கற்ப்பூரிசுவரர் கர்ப்பகிரக வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு பரகேசரிவர்மன் பராந்தக சோழன் (கி.பி.918 ) காலத்தியது. இது குடும்பு வாரியப் பெருமக்களும்,தோட்ட வாரியப் பெருமக்களும் கழனி வாரியப் பெருமக்களும், ஏரி வாரியப் பெருமக்களும் பெரிய ஏரி மராமத்து செய்தது பற்றிக் குறிப்பிடுகின்றது.


"ஸ்வத்ஸ ஸ்ரீ மாதிரி கொண்ட சேர்ப்பரகேசரி பன்மர்க்குயாண்டு பன்னிரண்டாவது கோட் நாள் நூற்றுருபத்தொன்பது பருவூர்க் கோட்டடத்துக் காவதிப்பாக்கமாகிய அமணி நாராயணச் சதுர்வேதி மங்கலத்து......இவ்வாட்டைக் குடும்பு வாரிய பெருமக்களுந் தொட்ட வாரியப் பெருமக்களும் பட்டர்களும் வசிட்டர்களும் உள்ளிட்ட மகாசபையார் பணியால் இவ்வாண்டு ஏரி ாரிகஞ் செய்கின்ற ஏரிவாரிகப் பெருமக்களோம் சோழ நாட்டுப் பாம்புணிக் கூற்றுத்து  அரைசூர் அரை சூருடைய .... ன் தீரன் சென்னிப் பேரரையர் பக்கல் ஒன்பதரை மாறி நிறை நூற்றிருபதின் கழஞ்சு பொன் கொண்டு இந்நூற்றிருபதின் கழஞ்சுப் பொன்னும் எம்மூர் பெரிய ஏரி கரை மண்ணாட்டுகின்ற ஓட நாயன்மார்க்கிடுவதற்க்கு முதலாக கொண்டு இந்நூற்றிருபதின் கழஞ்சு பொன்னாலும் வந்த வர்த்தியாலேய் பாண்டியனும் ஈழத்தரையனும் வந்து பெருமானடிகளோடு வேரூர் அஸ்திகடை செய்த நான்று இச்சென்னிப் பேரையர் சென்ற இடத்துப்பட்ட சேவகர் காரிமங்கலமுடையானுக்கும் வலிக் குட்டிக்கும் பெருநாயகனுக்கும் அழிநிலை மாடம்பிக்கும் ஆக இந்நால்வரையும்."


    பள்ளு நூல்களில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கூடற் பள்ளுவில் வடிவழக் குடும்பன் குடும்பு செய்து ஊர் மக்களுக்கு உழைத்த செய்தியைக் கீழ்கண்டவாறு உரைக்கிறது.

செய்யுள் 88 
    "ஆளுக்கும் பணியாள் - சீவலப்

      பேரிக்குள் காணியான் - வில்லென்றும்
            அரிப்பிட்டுப் போட்டான் -
பள்வரி

            தெரிப்பிட்டுக் கோட்டான்

            ...................................... குடும்பு செய்

            தூராருக் குழைத்தான் - அழகர் சொம்

            மார்க்கப் பிழைத்தான்"


    என்று வடிவழகக் குடும்பன் குடும்பு செய்து ஊர்மக்களுக்காக உழைத்துத் தாழ்வின்றி தானும் பிழைத்த செய்தியை வெளிப்படுத்துகிறது. இங்ங்கனம் குடும்பு என்னும் சொல் ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் தலிமைப் பதவியைக் குறிக்கிறது. 


    கி.பி.1891 இல் பதிப்பிக்கப்பட்ட ஆற்றங்கரை சம்சுதான வித்துவான் கடிகை ஐந்கமுத்து புலவர் இயற்றிய பொய்கைப் பள்ளுவில், பொய்கைக் குடும்பன் குடும்பு செய்த வரலாற்றினைக் கூறுவதாகவுள்ள பாடலடிகள் வருமாறு.


செய்யுள் 27 
    "இன்னமென்று சொல்வேனேன் பள்ளியர் தம் பெருமை
    யிதற்க்குமே லதிகமா மியம்பக்கே ளும்
    மன்னு திருநெடுமால் கொண்டதும்
பள்ளியீசன்
    மற்றோர்சேர் வதும்
பள்ளி மாநிலமெல்லாம்
    பண்ணுந் துலுக்கர்தொழு கையும்
பள்ளி வாசல்கல்வி
    பயிலு மிடமனைத்தும்
பள்ளி யிவற்றால்
    தென்னன் சொக்கலிங்கபெத் தண்ணல்பண் ணைக்
குடும்பு
    செய்யடியேன் குலத்திற் சிறந்தோ னானேன்
"

மள்ளர் - குடும்பர் ஒன்றே!

மள்ளர் - குடும்பர் ஒன்றென
உரைக்கும் பள்ளுப்பாடல்கள்


    வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் வழங்கிவந்த வேளாண்குடி மக்களின் வேறுபட்ட பெயர்கள் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை உணர்த்தி, மள்ளர்களின் நீண்டதோர் வரலாற்றுத் தொடர்ச்சியினை இணைத்தும், பிணைத்தும் பள்ளுப் பாடல்களே தெளிவுற்றுகின்றன. மள்ளர் குலத்தவரின் குலப்பட்டமே குடும்பர் என்பது குறித்துக் கூறும் பள்ளுப் பாடல்கள் சிலவற்றை இங்கே காட்டாகக் காண்போம்.

  • சாமிநாதப் பள்ளு

        இயற்றியவர் சிவபெருமாள் கவி.

செய்யுள் 10

        "பெருக்கமிடும் பண்ணைதனைக் காவியத்தியாய்
                வந்த
மள்ளன் பிரபலமோங்கு
        திருக்குலவு வீராச்சிமங்கை நகரக்
குடும்பன்
                வந்த திரஞ் சொல்வோமே"

    அடர்ந்த கருங்கொண்டையை முடிந்து, மீசையை நன்றாக முறுக்கு, உருமாலையை இறுக்கிக் கட்டி, வண்ணச் சோமனை இடையிற்கட்டி, சோமபானம் அருந்தி, தென்கரை நாட்டில் பெரும் புகழ் பெற்ற குடும்பனார் வரவை, அவர்தம் குடியினரான மள்ளர்கள் புகழ்ந்ததாக மேற்க்கண பள்ளு அடிகள் பரப்புரை செய்கின்றன.

  • எட்டையபுரப் பள்ளு

          இயற்றியவர் முத்துப் புலவர்

செய்யுள் 37

        "வாய்ந்த ராமனூற்றுப் பண்ணை
        மள்ளர் கட்டிய வெள்ளை காளையைப்
        பேய்த்தண்ணீர் வெறியாலே கொம்பை
        யுயர்த்திப் பிடிப்பாராம்
        குருமலை தனில் வாழும்
கெச்சிலாக்
        குடும்பன் கட்டிய யிடும்புக் காளையை 
        மறுவிலாத தென்னிசைக் குடும்பன்
        வளைத்து பிடிக்கவே...."

செய்யுள் 41

        "நெஞ்சூ டெருதுகுத்தும் நீள்காயாத்தாற் காய்ந்தே
        தொஞ்சே மயங்கி மதிசோர்ந்திருக்கும் வேளைதன்னில்
        மஞ்சாடும் பூங்கூந்தல்
மள்ளியர்கள் வாய்மொழியோர்
        சஞ்சீவிக்
குடும்பன் தானெழுந்து கொண்டானே...."

    தென்னிசைப் பள்ளு அடிகள் மள்ளரும் குடும்பரும் ஒன்றென்பதைத் தீர்க்கமுடன் தெளிவுறுத்துகின்றன. இதில் முதற் செய்யுளில் இடம் பெற்றுள்ள 'கெச்சிலாக் குடும்பன்' நினைவாகவே 'கெச்சிலாபுரம்' என்ற ஊர்ப்பெயர் ஏற்ப்பட்டுள்ளது. 'கெச்சிலாபுரம்' என்ற பெயரில் கோயில்பட்டி அருகே ஓர் ஊரும், கழுகுமலை அருகே ஓர் ஊரும் உள்ளன.

  • தென்புதுவைப்பதி தேவாங்கப் பள்ளு        

        "புள்ளியுரு மாலுங்கட்டி மள்ளியர்தமைப் பகட்டிப்
        போதவே சிலப்பங் கையில் வாணத்தடியுந்த்
        துள்ளிய வீசி முருக்கி வொள்ளிய கச்சை யிருக்கித்
        தொட்டு விளிக்குஞ் சபாது பொட்டது மிட்டு
        வள்ளல் பழனியப் பேந்திரன் பண்ணை வளம்பார்க்கிறான்
        மைந்தன்
உடையக் குடும்பன் வந்து தோன்றினானே...."

           மேற்கண்ட பள்ளு அடிகளும் மள்ளர் - குடும்பர் ஒன்றென்பதை உணர்த்துகிறது.

  • பொய்கைப் பள்ளு

          இயற்றியவர் கடிகை அங்கமுத்துப் புலவர், காலம் கி.பி. 1891 

செய்யுள் 25

        "குடும்பனென்ப துயர்ந்தசாதி யானல்ல வென்பர்
        குடும்ப நுயர்ச்சியினைக் கூறவெளி தோ
        நெடுங்கடற் புவியுள் ளோரவரவர் குலத்துக்கு
        நிகழ்த்துந் தலைமையுள் ளோனே
குடும்பனாம்
        திடஞ்சேர் மறையோராதி குலசிரேட் டருங்கெல்லாத்
        சேர்ந்திருக்கு மேன்பெயர் தெரியு மீது
        தடம்புயன் சொக்கலிங்கப் பெத்தண்ணல் பண்ணை மள்ளச்
        சாதிக் குடும்பனேன்னைத்
தள்ளலரிதே ..."

    மேற்கண்ட பள்ளு குடும்பர்கள் உயர்ந்த சாதியினர் என்பதை உணர்த்துவதோடு 'மள்ள சாதிக் குடும்பன்' என்ற சொற்றொடரின் ஊடாக மள்ளரும், குடும்பரும் ஒன்றென்பதை விளக்கி உரைக்கின்றது.

செய்யுள் 119

        "எண்டிசையும் போற்றுசொக்க லிங்கபெத்த னேந்திரதுரை
        மண்டலங்கொண் டாடுபண்ணை
மள்ளிமூத்  தாள்சாடி
        விண்டகன்ற பின் குடும்பன் மிகக்கிடை வைத்துவயல்
        கண்டுவந்தான் போலவொரு கணத்தினில் வந்துற்றானே .."

மேற்கண்ட பள்ளு மூத்த பள்ளியை மள்ளிமூத்தாள் என்றும் பள்ளியின் கணவனை 'குடும்பன்' எனவும் குறிக்கின்றது.

மள்ளர் - பள்ளர் ஒன்றே!


மள்ளர் - பள்ளர் ஒன்றென ஓதும் பள்ளிசை



    இன்று வாழ்கின்ற பள்ளர்களே இலக்கியங்கள் புகழ்கின்ற மள்ளர்கள் என்பதற்குப் பல்வேறு வரலாற்று அறிஞர்களும், மொழியியல் அறிஞர்களும், தங்களின் விளக்கங்களோடு கூடிய கருதுகோளை முன்வைத்த போதிலும் , பள்ளர்களே மள்ளர்கள் என்பதற்கு மறுக்கவென்னாச் சான்றுகளைப் பள்ளுப் பாடல்களே அதன் பாடலடிகளின்  ஊடாகப் பதிய வைத்துள்ளன. அது குறித்துச் சற்றுக் கூர்ந்து நோக்குவோம்.


  • செங்கோட்டுப் பள்ளு

           இயற்றியவர் பொன்னுச் செல்லையா, காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.

செய்யுள் 197 

        "பள்ளனும்பள் ளியருடனே  வந்து போற்றப்
                பண்ணையினார் கோல்காரன் தனையும் பார்த்து

        உள்ளமகிழ்த் திவூரில் பள்ளர் பள்ளி
                ஒருவரிலா மற்படியிங் கழையும் என்ன

        வள்ளல்மொழி கேட்டவன்போய் அளித்த பின்பு
                வழமை செறி மோரூரில் வாழ்ந்திருக்கும்

        மள்ளர்கள் பள்ளிய ருடனே கூடிவந்து
                மன்னவரைத் தொழஅவரும் மகிழ்ந்து சொல்வார்..
."

செய்யுள் 245 

        "வந்ததுமே திருக் கூட்டமதாகவும்
                மள்ளரும் பள்ளிமார்களும் கூடியே

        சிந்தை தானும் மகிழ்ந்து அவரவர்
                தெய்வங்கள் தமைப் போற்றியேகும்பிட்டு
"

செய்யுள் 354 

        "மள்ளனும் இளைய பள்ளி
                மனையினில் வந்தி ருந்து

        கள்ளிமோ கத்தால் காமக்
                கடலினில் அழுந்திக் கொண்டான்

        பள்ளன்செய் கொடுமை மூத்த
                பள்ளியும் மனம்பொ றாமல்

        வெள்ளியங் கிரியார் பண்ணை
                வேந்தர்முன் வந்து சொல்வாள்
"

செய்யுள் 819 

        "மங்கையர் மீதினில் மாங்க னி - பறித்
                தங்கிட
மள்ளர்வி  ளாங்க னி

        மந்தியின் மீதிலே எறிந்து மே - மகிழ்
                விந்தையைப் பாரடி
பள்ளிய ரே"

மேற்கண்ட செங்கோட்டுப் பள்ளுவின் செய்யுட்கள் பள்ளரே மள்ளர் என்பதை உறுதி செய்கின்றன.

  • திருவேட்டைநல்லூர் ஐயனார் பள்ளு

          இயற்றியவர் சுப்பிரமணிய நாவலர், காலம் கி.பி.1882 

பகுதி 118 

        "பள்ளத் தடாக நல்லூர்ப் பள்ளி சொன்ன சொற்படியே
                மள்ளத் தலைவனைக் கால்மரம் வெட்டி விட்டபின்பு

        உள்ளத்து அறிவான் உடல்செலவு எல்லாம் போக்கி
                எள்ளத்தனை குறையாது இருப்பு வகை சொன்னானே
"

    பள்ளரே மள்ளர் என்கிறது மேற்கண்ட பள்ளு அடிகள்.

  • எட்டையபுரப் பள்ளு

          இயற்றியவர் முத்துப் புலவர்

செய்யுள் 146 

        "அகத்திலுகந்து கொண்டு நு கத்தை மகிழ்ந்து கையிலெடுத்தான்
                பண்ணையாண்டவர் சொல்படி பூண்டு
பள்ளரிடங் கொடுத்தான்

        மகத்துவ மீறிய வையகத்து மானதவாழ்த்தித் தொழுதார்
                மள்ளர் வலிலேரைப் பூட்டி நயமாகக் கூட்டியுழுதார்"

செய்யுள் 153 

        "வேலைவிட்டொன் னார்தளத்தை வென்றருள்கு மாறயெட்ட
                மாலையிட்ட தார்பரவு
மள்ளருக்குப் பள்ளியர்கட்

        செளைவிட்டுப் பின்வேறு சிந்தையுண்டோ செய்கால்வாய்க்
                காலைவிட்டாப் பாலே கடக்கக்கா லேறாதே
"

  • சாமிநாதப் பள்ளு

         இயற்றியவர் சிவப்பெருமாள் கவி

செய்யுள் 7

        "மஞ்சினஞ் சூழ்ந்திலகு வீராச்சி
                மங்கை நகர்க்கிசைந்திடும் பண்ணை

        மள்ளனுக்கே மனமகிழ் மூத்த
                பள்ளி வந்தனளே"

பள்ளரே மள்ளர் என்பதற்கு சாமிநாதப் பள்ளு ககரும் சான்று இது.

  • தென்புதுவைப்பதி தேவாங்கப் பள்ளு

      பக்கம் 19 வரி 9 ,10
        "வருமனய மள்ளரெலா மூத்தபள்ளிக் காவேசம் வறுத்து வாய்மெய்
                பெருமையென வேளாரை வருகவென வந்தவகை பேசலாமே"

  • முக்கூடற் பள்ளு

         இயற்றியவர் பெயர் தெரியவில்லை, காலம் 1670

செய்யுள் 10

        "ஆதிமரு தீசருக்கும் ஆட்பட் டழகருக்கும்
                பாதியடி மைப்படுமோ
பள்ளிமரு தூரிளையாள்

        சோதிமுக மள்ளருக்கே தோன்ற வயலுற்ற நட்ட
                போதிலொரு பூவில் ஐந்து பூவும் பயிராமே
"

    தன ஒளி பொருந்திய முகம் மள்ளர் வடிவழகக் குடும்பனாருக்கு மட்டுமே தோன்றும் படியாக மருதூர் இளைய பள்ளி வயலில் நாற்று நட்டால் பயிர் செழித்து வளர்ந்து விளைச்சல் ஐந்து மடங்காய் பெருகி விளையும் என்னும் பொருள்பட அமைந்த மேற்கண்ட முக்கூடற் பள்ளு  அடிகள் பள்ளரே மள்ளர் என்பதையும் அறிவிக்கின்றன.