மருதநில மக்களின் நெல்மரபு திருமண நிகழ்வு

     சமீபத்தில் கோவை மாநகர், மருத மலை முருகன் திருக்கோவிலில் 'தேவேந்திர குல வேளாளர்(பள்ளர்)' மரபுப்படி நடைபெற்ற திருமண நிகழ்வு தொகுப்பு இவை. நெல்லின் மக்களாம் பள்ளர்களின்,தொன்றுதொட்டு வரும்  நெல்மரபு திருமண நிகழ்வு என்பது அரசனாக இருந்தாலும்,குடி மகனாக இருந்தாலும், அது ஊர் குடும்பரின் முன்னிலையில் நடை பெற வேண்டும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இந்த நிகழ்வு.


மணமக்கள்: டாக்டர் முருகன், டாக்டர் தெய்வானை
இடம்: கோவை மருத மலை முருகன் திருக்கோவில்


     நெல்மரபு திருமணம் தேவேந்திர குல வேளாளர்களுக்கு மட்டுமே உரியது.ஏழு நாள் திருமணமான இதில் முதல் நாள் நெல் ஊரபோடுவதில் தொடங்கி ஏழாம் நாள் வயல் நடவுக்கு சென்று வந்த பின்னர் மணமகள் திருமணம் செய்வது மரபு .இது தம்பதிகளுக்கானது மட்டுமன்றி இரு சமுதாய இணைப்பு விழாவாக நடைபெறுவது.சம்பந்திகளுக்கு தரப்படுவதை விட உறவும் உறவும் இணையும் வகையில் ஊர் தலைவர்கள் மாலை மாற்றிய பின்னரே மணமக்கள் மாலை மாற்றுவார்கள் 1008 நெல் போற்றி பாடல்கள் சுத்தமான தமிழில் பாடப்பட்டு திருமணம் நடைபெறும் .450 வருடங்களுக்கு முன்புவரை முறையாக வந்த இந்த திருமணமுறை கிழக்கு அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது கோவை பேரூர் பட்டீஸ்வரர் (சிவன் )-பச்சைநாயகி (பார்வதி)வடிவில் தொடங்கிய இந்த வகை திருமண முறையை பாது காப்பது தேவேந்திரர்களின் கடமை




ஊர் தலைவருக்கே முதல் மரியாதை (மாலை அணிவித்தல்). இந்த வழக்கமே மதுரை மீனாட்சி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் என பள்ளர்களின் அனைத்து கோவிலிலும் கடை பிடிக்கப்படுகிறது. அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் திருமண நிகழ்வுகளில்  ஊர் தலைவரே முதன்மை.





மண மக்கள் ஒன்றாய் செய்யும் சடங்கு





மணமக்களுக்கான நெல்லால் ஆன அணிகலன். ஊர் குடும்பர்கள் கையில்.




மணமகள்


மணமகன்
கெட்டி மேளம்.....கெட்டி மேளம்......

தம்பதி சகிதமாய் ஊர் குடும்பனாருடன் நெல்லுக்கு மரியாதை




மணமக்கள் தங்கள் குடும்பத்தினருடன்...


வரவேற்பு  நிகழ்வில் மணமக்கள்.

தேவேந்திர குல அறிஞர் பெருமக்களுடன் மணமக்கள்.