கழுகுமலை முருகன் கோயிலும், பள்ளர்களின் பங்குனித் திருவிழாவும்


கழுகுமலை முருகன் கோயிலும்,
பள்ளர்களின் பங்குனித் திருவிழாவும்


    பள்ளர் கோட்டை என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு அதி மதுர பாண்டியன் என்பான் ஆட்சி செய்து வந்தான். பள்ளர் கோட்டையான பழனங்கோட்டை (வயல் சூழ்ந்த கோட்டை) பின்னாளில் பழங்க்கோட்டை (பழமையான கோட்டை) என்றானது. இவ்வூர் தூத்துக்குடி மாவட்டம், கோயில்பட்டி வட்டத்தில் கழுகுமலை அருகே உள்ளது. 'குழுவானை நல்லூர்' எனவும் அழைக்கப் பெற்ற கழுகுமலையில் 'சமணப் பள்ளி' இருந்தது. பள்ளர் குல மக்களே சமணத்தை தழுவி இருந்தனர். இச்சமணக் கோயிலானது கி.பி.8 -12 ஆம் நூற்றாண்டுகளில் இந்துக் கோயிலாக மாற்றப் பட்டது ஈனக் கூறுவார் நாவலாசிரியர் பூமணி. பாண்டியர்கள் ஆண்டு வந்த பழங்க்கோட்டையை கைலாசபுரம் ரெட்டியார்களும், மறவர்களும் அழித்துள்ளனர். இவ்வூரில் உள்ள பள்ளர் தெருவில் பழமையான சிறிய கல்மண்டபம் இன்றும் உள்ளது. அதிமதுர பாண்டியன் என்னும் பள்ளர் குல வேந்தன் அருகில் வடபுறம் ஒரு கல் தொலைவிலுள்ள உவணகிரியைச் (உவணம் - கழுகு;கிரி - மலை  ) சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் வேட்டையாடச் சென்றார். அப்போது இளைப்பாறிக் கொண்டிருந்த வேளையில் ஒரு பசு பாறை ஒன்றின் மீது தானாகவே பால் சுரப்பதைப் பார்த்தாராம். அப்போது மணி ஓசையும் காதில் விழுந்ததாம்.வியப்படைந்த பாண்டிய வேந்தன் எழுந்து பசு அருகே செல்லவும், பசு மிரண்டு ஓடியதாம். பூசை மணி ஓசையும் நின்றுவிட்டதாம். அன்று இரவே முருகன் தனது பக்தர்கள் இரண்டு பேரின் கனவில் தோன்றி மன்னரிடம் சென்று பசு பால் சுரந்த இடத்தில் தனக்குக் கோயில் எழுப்புமாறு கூறிக் கட்டையிட்டாராம். இச்செய்தியறிந்த வேந்தன் உடனே தனது படையணிகளோடு உவணகிரி காட்டுப் பகுதிக்குச் சென்று பசு பால் சுரந்த பாறையைப் பெயர்த்தெடுத்தாராம். அனே ஒரு க்கையும், குகையினுள் மயில் மீது அமர்ந்த முருகன் சிலையினையும் கண்டு வணங்கினாராம். உடனடியாக உடன்காடாய் இருந்த உவனகிரிப் பகுதியைத் திருத்தி முருகனுக்குக் கோயில் அமைத்துத் தன மக்களைக் குடியமர்த்தி அவ்விடத்திற்கு உவணகிரி எனப் பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. (தினமலர் 26 .07 .2000 ப.11).கோவிலினுள் மலைப்பாறைக்கருகில் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 குறுக்க பரப்பளவில் நடுவில் மகிழ்வு மணடபத்துடன் நான்கு புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட தெப்பக்கு குளத்தையும், இப்பாண்டிய வேந்தன் வெட்டினான். மழைக்காலங்களில் கரிசல் காடுகளில் பெய்யும் மழைநீர் மேற்க்குக் கண்மாய் மதகு வழியாக அடிப்பகுதியில் அமைக்கப் பட்ட கல் வாய்கால் வழியாகத் தெப்பத்திற்கு வருகிறது. இத்தெப்பத் தண்ணீர் இவ்வூர் மக்களுக்கு இன்று குடிநீராகப் பயன்படுகிறது. இந்தத் தெப்பத்தில் 'அப்ரேக்' என்னும் தாமிரச் சத்துள்ள கரிசல் மண் கலந்துள்ளதால் தண்ணீர் கெட்டுப்போகாமலும்,




மருத்துவ சக்தியுடனும் இருக்கின்றது. கோய்ல்லின் பின்புறம் உள்ள மலையின் மேலே பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில் மூன்று சமணச் சிறப்பத் தொகுதிகளும், அய்யனார் கோயிலும், சுனையும் உள்ளன. தென்னகத்தின் எல்லோரா என அழைக்கப் பெரும் வெட்டுவான் கோயிலும் உள்ளது. இந்தக் கோயில் பெரும் பாறையில் 25 அடி ஆழத்தில் சமணத்தைத் தோண்டிய சிற்ப வெளிப்பாடாகும். "பாண்டிய மன்னர்கள் சமணத்தைத் தழுவியபோது அவர்தம் மரபினரான பள்ளர்களும் சமத்தையே தழுவினர். நாயக்கர்களின் படையெடுப்பால் பாண்டிய மன்னர்களும், ஏராளமான பள்ளர்களும் கொல்லப் பட்ட பின்னரே சமணம் என்னும் 'ஆசீவகம் வீழ்ந்தது' எனக் கூறுவார் 'நாவலாசிரியர் பூமணி'.

    கழுகு மலைக்கு 'அறைமலை' என்றொரு பெயரும் இருந்து வந்தது. கழுகுமலையின் உண்மையான பெயர் திருநெற்சுரம் என்பதாகும். நெற்சுரம் என்பதே நேச்சுரம் என்றாகியிருக்க வேண்டும். இப்பகுதி நேச்சுரம் நாடு எனவும் வழங்கி வந்தது. இப்பகுதியை வீரநாராயண பாண்டியன் என்ற பாண்டிய மன்னும் ஆண்டு வந்துள்ளான். இவ்வூருக்கு வடபுறமுள்ள குளத்திற்கு 'வீரநாராயண ஏரி' என்று பெயர். உவர்ணகிரிக்கும், கவர்ணகிரிக்கும் வரலாற்றுத் தொடர்பு இருந்துள்ளது.பின்னாளில் உவர்ணகிரி என்பது கழுகுமலை என்று பெயர் மாற்றப் பட்டது. பாண்டிய மரபினராகிய பள்ளர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னல் இக்கோயில் நிருவாகம் முழுவதும் எட்டையபுரத்துப் பாளையக்காரனிடம் ஒப்படைக்கப் பட்டது. இன்றளவும் எட்டப்பனின் பிறங்கடைகளே இக்கோயில் வருமானத்தில் பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர். இருப்பினும் அதிமதுர பாண்டியன், வீரநாராயண பாண்டியன் ஆகிய அபாண்டிய மன்னர்களின் மரபினர்களான பள்ளர்களுக்கும், இலைமறைகாயாகச் சில உரிமைகளும் பர்பு வழிப்பட்ட மரியாதைகளும் இன்றளவும் இருந்து வருகின்றன.
    கழுகுமலை முருகன் கோயிலுக்கு உரிமை உடைய 25 குறுக்க நெல் வயல்கள் கழுகுமலை வடக்குத் தெருவைச் சேர்ந்த பள்ளர்களுக்கு உரிமை உடையதாக உள்ளது. கெச்சிலாபுரத்திற்கு வடக்கேயுள்ள கழுகுமலை முருகன் கோயிலுக்குரிய புன்செய் நிலங்கள் (4 .52 .௦ ஹெ.ஏர்) இவ்வூரைச் சேர்ந்த பெ.குமாரசாமி,பெ.மாரியப்பன் ஆகிய பள்ளர் குலத்தவர்களின் பெயரிலேயே (19 /3A , 19 /4 ) இன்றும் உள்ளது. பங்குனி உத்திரத் தேர்த்திருவிழாவின் போது இக்கோயிலில் தொன்று தொட்டு இன்று வரை பள்ளர்களுக்கே முதல் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.தேரினை இயக்கும் தடிபோடும் உரிமை பள்ளர்களுக்கு மட்டுமே உள்ளது.


 பள்ளர்கள் தவிர வேறு குலத்தவர் எவரும் தடியினைத் தொடக்கக் கூடாது. "தேவேந்திரன் தொட்டால் தான் தேரோடும்" என்னும் சொல் வழக்கு எல்லா தரப்பு மக்களிடமும் வழங்கி வருகின்றது. தேரின் மேலே நான்கு குதிரைகளை ஒட்டியவாறு தேவேந்திரன் உருவ மரச் சிற்பம் உள்ளது. தேரினைச் சுற்றியுள்ள சிற்பங்கள் யாம் காமக் கலைகளை கற்றுத் தருவதாக உள்ளது. தேரின் வலதுபுறத் தடி கெச்சிலாபுரம், சங்கரலிங்க புரம் பள்ளர்களுக்கும்,இடதுபுறத் தடி கழுகுமலை, ஆலங்குளம் பள்ளர்களுக்கும் உரிமையுடையதாகும்.100 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் பூசகர்களும், நிருவாகிகளும் பள்ளர் ஊர்களுக்கு மேளதாளத்துடன் சென்று, ஊர்க் குடும்பனாருக்கு மாலை அணிவித்து, தேங்காய்,பழம்,வெற்றிலை,பாக்கு வைத்து, வெண்கொற்றக்குடை பிடித்து முதல் மரியாதை செய்து அழைத்து வந்து, தேரோட்டச் செய்வாராம். ஆனால் இப்போது இந்நிலை படிப்படியாக மாறிப் பள்ளர் ஊர்களுக்கு சென்று அழைத்து வரும் மரபு அற்று போய்க் கோயில்களில் வைத்தே பள்ளர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு ஊர்க் குடும்பனார்களுக்குக் கழுத்தில் மாலை அணிவிக்கப் பட்டு, வலது கையில் பூ சுற்றப் பட்டு சந்தனம்,குங்குமம் அணிவிக்கப் பட்டு நல்ல முறையில் தேரோட்டி நகர் வளம் வந்து, விழா எடுத்து மக்களை மகிழ்வித்துத் தேரினை நிலையில் நிறுத்தக் கோயில் பூசகர்களால் (பிராமணர்களால்) வாழ்த்தப் படுகிறார்கள்.(நேர்காணல்,கு.பாதாளை அம்மாள், கெச்சிலாபுரம்).

தேர் நிலை கொண்டு நிற்கும் இடத்தருகே பள்ளர்களுக்கு சமூக மண்டபம் இருந்தது. இம்மண்டபம் பாண்டிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட நாயக்கர் ஆட்சியின் போது இடித்து தள்ளப் பட்டது. மண்டபம்  இருந்த இடம் பள்ளர் சமூகத்திற்கு பாத்தியப் பட்டதாகவே இருந்தது.  கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாகப் பள்ளர்களின் அறியாமையாலும், குற்றப் பரம்பரையினரான மறவர்கள் கோயில் நிருவாகத்திற்குள் உட்புகுததாலும் இருந்த அந்த இட உரிமையும் பள்ளர்கள் இழக்க நேரிட்டது. அதிமதுர பாண்டியனின் மரபினரான கழுகுமலைப் பகுதி வாழ் பள்ளர்கள் தங்களது மரபு வளையக் கூட அறிய முடியாத அளவிற்கு வடுகராட்சி வினையார்ரியுள்ளது என்பது வேதனைக்குரிய புலனமாகும்.

செந்தூர் முருகன் கோயிலும், செந்நெல் முதுகுடியினரும்


செந்தூர் முருகன் கோயிலும், செந்நெல் முதுகுடியினரும்


    முத்துக் கொழிக்கும் பாண்டி மண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள பழம்பெரும் எழிலூர் திருச்செந்தூர். இக்கடற்கரையில் அமைந்துள்ள மலை 'சந்தன மலை' என வழங்கப் பெற்றது. 'செந்தின் மலை' எனவும் அதற்குப் பெயர் இருந்தது. இது மருதமும், நெய்தலும் மயங்கிய ஊர் என்பதைக் கடைச்சங்கப் புலவர் பரணர் அகநானூற்றில்



        "கழனி உழவர் கலிசிறந்(து) எடுத்த
        கறங்கிசை வெரீஇப் பறந்த தோகை
        அணங்குடை வரைப்பகம் பொலிய வந்திருக்கும்
        திருமேனி விளக்கின் அலைவாய்
....."

எனப் பாடியுள்ளார். (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.1 )



    தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர் எம்.எசு.பூரணலிங்கம் இரண்டாம் தமிழ்சங்கமிருந்த இடம் கபாடபுரம் என்றக் குறித்துப் பிறைகோடுகள் "அலைவாய்" எனக் குறித்துள்ளார். 

    வால்மீகி, இராமாயணத்தில் கபாடபுரத்தின் இருப்பிடத்தைச் சுட்டும் பொழுது 

        "தாமிரபருணி அழகிய சந்தனச் சோலைகளால்
         மூடப்பெற்ற திட்டுக்களையுடயதாய்க்
         கணவனிடத்தில் அன்புள்ள யுவதியானவள்
         புக்ககம் புகுமாறு போல சமுத்திரத்தில்
         சென்று விழும், பிறகு பொன்னிறைத்தாயும்
         
பாண்டியர்க்கு யோக்கியமாயுமுள்ள கபாடத்தைப்
         பார்க்கக் கடவீர்கள்
"  

(பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.1) 
    எனக்குறித்துள்ளார்.

    வால்மீகி கபாடபுரத்திற்க்குக் கூறியுள்ள குறிப்புகள் திருச்செந்தூருக்கு மிகவும் பொருத்தி வருகின்றன.

    தண் பொருநையாறு (தாம்பிரபரணி) கடலோடு கலக்குமிடத்திற்க்குத் தெற்கே சந்தனச் சோலைகளும், முத்துக்களும் காணப் பெற்ற இடம் திருச்செந்தூராகும்.

    'சந்தனக்காட்டுகுள்ளே கந்தனை நான் கண்டு கொண்டேன்' என்பது இவ்வட்டாரத்து நாடோடிப் பாடலின் ஓரடி. திருச்செந்தூர் முருகன் குடியிருக்கும் மலைக்குச் சந்தன மலை எனப் பெயர். கந்தபுராணம் இம்மலையைக் 'கந்தமாதன பர்வதம்' எனப் புகழும், இன்று இம்மலையில் சந்தன மரங்கள் இல்லை. ஆயினும் அருணகிரி நாதர் காலத்தில் (கி.பி.15 ஆம் நூற்றாண்டு என்பர்) இம்மலையில் சந்தன மரங்கள் அடர்ந்திருந்தன. செந்தில் கந்தனைப் பாடும் போது  அருணகிரி நாதர்,

        "சந்தனத்தின் பைம் பொழில் தண் செந்திலில்
        தாங்கும் பெருமாளே"  

(பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.2)
    எனப் பாடியுள்ளார். இன்றும் இக்கோயிலில் வழங்கப்படுமளவு சந்தனம் ஏனைய முருகன் கோயில்களில் வழங்கப் படுவதில்லை. கால மாறுபாடுகளால் சந்தன மரங்கள் அழிந்து போயிருக்கலாம்.

    சாணக்கியர் தம் பொருள் நூலில் 'பாண்டியக் கவாடம் என்ற முத்தைப் பற்றி கூறுகிறார். கபாட புரத்தில் முத்துக்கள் கிடைத்தன. இன்றும் இப்பகுதியில் முத்தெடுக்கின்றனர். அருணகிரி நாதரும்,பகழிக் கூத்தரும் இவ்வூரில் முத்துக்கள் கொழிப்பதைப்  புகழ்ந்து பாடியுள்ளனர்.
        "செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ் தெரி
         செந்திற் பதி நகர் உறைவோ னே"
          (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.2)

    என அருணகிரி நாதர் பாடியுள்ளார். குன்றெறிந்த குமரவேள் சங்கத்தில் இருந்ததை நக்கீரர் குறிப்பிட்டுள்ளார். சங்கத்திற்கு இலக்கண நூல் ஈந்த அகத்தியருக்கு இங்கு கோயில்கள் உண்டு. கபாடபுரத்தின் ஒரு பகுதியாக இவ்வூர் விளங்கி இருக்கிறது. மீதமுள்ள பகுதியே கடலால் கொள்ளப் பட்டுள்ளது. பாண்டிய மன்னர்களான சிவனும், முருகனும் கபாடபுரத்திலுள்ள இடைச்சங்கம் எனப்படும் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் அவைப் புலவர்களாக இருந்ததாகக் கூறப்படும் செய்திகள் இதனை உறுதிப் படுத்துகின்றன.

    கலங்கள் வந்து தாங்கும் வாயிலாக அமைந்ததால் கபாடபுரம் என்றும்,பின்பு அலைவாய் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம். அகநானூறு, தொல்காப்பிய மேற்கோள் செய்யுள், திருமுருகாற்றுப் படை கந்த புராணம் ஆகிய நூற்கள் இவ்வூரை 'அலைவாய்' எனக் குறிப்பிடுகின்றன.
 
    முருகன் நிலை பெற்று இருப்பதால் 'திரு' என்ற அடைமொழி பெற்றுத் 'திருச்சீரலைவாய்' என்ற பெயர் நிலைத்தது. இக்கோயிலில் அலைவாயு கந்த பெருமான் எனப் பெயருள்ள இவ்வூருக்கு நாமனூர் அலைவாய் என்றும் பெயர் வழங்கப்பட்டது.



    திருச்செந்தூரின் நடுவில் அமைந்துள்ள சிவக்கொழுந் தீசுவரர் கோயில் கல்வெட்டில் திருச்செந்திலூர் என்ற பெயர் காணப்படுகிறது. இப்பெயர் மருவியே 'திருச்செந்தூர்' என்றாகியிருக்க வேண்டும்.

    கி.பி.1648 ஆம் ஆண்டு உலாந்தர்கள் சிவக்கொழுந்தீஸ்வரர்  கோயிலில் தாக்குதல் நடத்தியாதத் தெரிகிறது. இக்கோயிலிலுள்ள பல சிலைகள் அடித்து நொறுக்கப பட்டுள்ளன. சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் முருகன் சில இருந்ததென்றும், அது கி.பி.10 ஆம் நூற்றாண்டில் கடற்கரைக் கோயிலுக்கு மாற்றப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குலசேகரன் பட்டணம் சரவணமுத்து ஞானியரது ஏடு "கி.பி.1648 ஆம் கடற்க்கரை கோயில் முருகன் கோயிலாக மாற்றப்பட்டது" எனக் குறிப்பிடுகிறது. (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.5) பேராசிரியர். க.நெடுஞ்செழியன் கருதுவதைப்  போல் ஐயனார் கோயிலாகவே கடற்கரைக் கோயில் இருந்துள்ளது. அதற்க்கு முன்பாக இக்கோயில் பாண்டியரின் அரண்மனையாத் தோற்றம் பெற்றுள்ளது.

    கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் ஏராளமான குகைக் கோயில்கள் அமைத்தனர். பாண்டியர்களும் குகைக் கோயில் அமைத்தனர். திருச்செந்தூர்க் குகைக் கோயிலும் இக்காலத்திலேயே அமைக்கப் பட்டிருக்கலாம்.

    "பாண்டிய நாட்டிலும் குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன... அவை பல்லவர்கள் காலத்திலேயே உருவாக்கப் பட்டவை என்பதிலும் பல்லவக் கலை மரபையே பின்பற்றியவை என்பதிலும் ஐயமில்லை" என்கிறார் கே.ஏ.நீல கண்ட சாசுதிரி (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.7). அமெரிக்க நாட்டு பிட்சுபர்க்குப் பலகலைக்கழகச் சமத் துறைப் பேராசிரியர் டாக்டர் பிரட்டு குளோதியும் இம்முடிவுக்கே வருகிறார்.

    கி.பி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் ஆதி சங்கரர் திருச்செந்தூர் சுப்ரமணிய புரத்தில்
    "பெரிய கடலின் கரையினிலே, முனிவர்கள் போற்றிப் புகழ்கிறதாயும், பாவங்களைத் தீர்க்கவல்லதாயும் விளங்கும் கந்தமாதன மலையில் அருட்பெரும் சோதியாக் குகப் பெருமான் ஒருக்கையில் அமர்ந்து அண்டினவர்களுக்குக் கெல்லாம் ஆதரவு தருகிறார். அவரது பொற்பாதங்களைப் பற்றி உய்வாம்" என்கிறார் (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.7), இதனால் ஆதிர் சங்கரர் காலத்திற்கு முற்பட்டே இஃது ஒரு குகைக் கோயிலாக இலங்கியது என்பது  புலனாகும்.

    "வரகுண பாண்டியனால் திருச்செந்திற் கோயில் நித்த வழிபாட்டிற்காக 1400 பொற்காசு பன்னீருராரிடைப்  பகிர்ந்து கொடுக்கப் பட்டது. வட்டி ஆண்டிற்கு ஒரு காசிற்கு இரு கலம் நெல் என்றும், வட்டியைக் கொண்டு வழிபாட்டை நடப்பிக்க வேண்ருமேன்ரும் வட்டி நிலுவையாயின் இரட்டியும் 25 காசு தண்டமும் இருக்க வேண்டுமென்றும் விதிக்கப் பட்டன. இக்கல்வெட்டு பொறிக்கப் பட்ட காலம் கி.பி. 875 ஆம் ஆண்டாகும்." (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.126 - 127 )

    பாண்டியன் மாறவர்மன் காலத்தில் மங்கலக்குறிச்சி என்னும் ஊரில் இரண்டு மா அளவு நிலங்களைப் பூசைக்குக் கொடுத்ததாக இக்கோயிலுள்ள ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. கி.பி.15 ஆம் நூற்றாண்டில் இக்கோயிலில் நிறுவப்பட்ட ஒரு கல்வெட்டு இக்கோயிலில் உள்ள நக்கீரர் சிலைக்குப் பூசை செய்வதற்காக ஒரு நிலத்தை 630 கலியுக ராமன் பணத்திற்கு விற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திருச்செந்தூர்க் கோயிலில் நக்கீரர் சிலை இருந்ததை அறிகிறோம்.ஆனால் இப்போது நக்கீரர் சிலை திருச்செந்தூர்க் கோயிலில் இல்லை.

    "கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் அடையாளம் தெரியாமல் மறந்து விட்டனர். நாயக்க மன்னர்களும் இப்பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றவில்லை. அடுத்திருந்த திருவிதாங்கூர் மன்னர்கள் திருநெல்வேலிச் சீமையின் தென்பகுதியை ஆண்டனர். இதற்கான ஆவணம் திருச்செந்தோர்க் கோயிலில் உள்ளது" எனக் குறிப்பிடுகிறார் கால்டுவெல். (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.8 )

    ஆனால் பாண்டிய மன்னர்களும், அவர் தம் வழி வந்த மரபினரும், மரபினரும் திட்டமிட்டு அடையாளம் தெரியாமல் ஆக்கப் பட்டுள்ளனர். திருச்செந்தூர்க் கோயிலின் மேற்க்குக் கோபுர வாயில் அடைக்கப்பதர்க்கான காரண காரியங்களை ஆய்ந்து ஆராய்வோமானால் பாண்டிய மரபினரை எளிதாக் கண்டறிய முடியும்.

    திருச்செந்தூர்க் கோயிலுக்கு நேரடி உறவும், உரிமையும் உள்ள ஊர் 'திருச்செந்தூர்பட்டி'. இவ்வூர் திருவைகுண்டம் வட்டம், ஆழ்வார்கற்குளம்  ஊராட்சிக்கு உட்பட்டதாகும். இவ்வூர் 'திருச்செந்தூர்ப் பச்சேரி' எனவும் வழங்கப்படுகிறது. பொருநை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள பள்ளர்கள் மட்டுமே வாழக்கூடிய இச்சிற்றூர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊராகும். வயல் சூழ்ந்த இவ்வூரைச் சுற்றி 35 கோட்டை விதைப்பாடு நிலம் உள்ளது. கோயில் தோன்றிய காலந்தொட்டு பன்னெடுங்காலமாக 'நாள் பூசை' செய்வதற்குப் பல்வேறு ஊர்களில் இருந்து பள்ளர் குல மக்கள் பொருநை ஆற்றில் புனித நீராடி, நெல் குத்தி அரிசி கொண்டு சென்றுள்ளனர். இவ்வரிசியின் மதிப்பு '3 1 /2 கோட்டை' எனக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1947 க்கு முன் திருச்செந்தூர்ப் பட்டியிலிருந்து திருச்செந்தூர்க் கோயிலுக்கு 'நாட்கதிர்' கொண்டு செல்லும் மரபு இருந்துள்ளது. 'நாட்கதிர்' கொண்டு செல்லத் திருச்செந்தூரில் இருந்து கோயில் யானை திருச்செந்தூற்பட்டிக்கு வந்து 'நாட்கதிரை' எடுத்துக் கொண்டு சென்று நான்கு வீதிகளில் வளம் வந்து மேற்கு வாயில் வழியாகக் கருவறைக்குள் சென்று நாட்கதிரைக் கசக்கி அதனை அரிசியாக்கி அதில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துக் கோயிலில் உள்ள அரிசியோடு போட்டுப் பொங்கல் வைப்பார். யானையுடன் நாட்கதிரைக் கொண்டு செல்லக் கூடிய பள்ளர்களின் செலவுத் தொகையைக் கோயில் குடும்புவே ஏற்றுக் கொள்ளும். தமிழ்க் கடவுள் முருகனுக்குப் படைத்த அப்பம், தேங்காய், பழம் ஆகிய பண்டங்களைக் கோயிலுக்குச் சென்றவர்கள் பெற்றுக் கொண்டு வந்து திருச்செந்தூர்பட்டியில் உள்ள  ஒவ்வொரு வீட்டிற்கும் முறைப்படி வழங்குவர். பிற்காலங்களில் சீட்டுக் குலுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட இருவர் 'நாட்கதிரைக்' கொண்டு சென்று கோயிலின் மேற்கு வாயில் வழியாக மண்டபத்தில் வைத்து, அதனை அரிசியாக்கிப் பொங்கலிடுவர். இதற்காகக் கோயில் குடும்பில் இருந்து ரூபாய் 500 செலவுத் தொகையாகக் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு முறை சீட்டுக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப் பட்ட விவரமறியாத இருவர் நாட்கதிர் கொண்டு செல்ல அங்கே மேலாண்மை செய்ய வந்த வெள்ளையர்கள் நாட்கதிர் கொண்டு சென்ற பள்ளர்களைப் பற்றி கேட்டபோது கோயிலில் ஆதிக்கம் செலுத்தி வந்த வந்தேறி ஆரியப் பிராமணர்கள், "கோயிலுக்கும், பள்ளர்களுக்கும் இனி எந்த உறவும், வரவும் இல்லை" என ஏமாற்றிக் கையொப்பம் வாங்கிக் கொண்டு, 500 ரூபாயும், அப்பமும், தேங்காய், பலமும் கொடுக்காமல் அனுப்பி விட்டனர். அத்தோடு கோயில் குடும்பிற்க்கும், பள்ளர்களுக்குமான நிருவாக உறவுகள் நிறைவுற்றது.



    திருமணம் செய்து கொள்ளக் கூடியவர்கள் திருச்செந்தூர்க் கோயிலுக்கு பாக்கு வைக்க வேண்டும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 1 1 / 4 பணமும், முருகனுக்குக் கட்டிய பட்டும் கோயிலில் இருந்து கொடுத்து விடப்படும்.அப்பத்தைக் கட்டிக் கொண்டு தான் திருமணம் நடைபெறும். பள்ளர்கள் இறந்தாலும், ஆணாக இருந்தால் வேட்டி, துண்டும், பெண்ணாக இருந்தால் சேலையும் அடக்கச் செலவுப் பணமும் கோயிலிலிருந்து கொடுத்து விடப்படும்.

    பின்னாளில் பள்ளர் குளத்தில் பிறந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாத்தூர், சின்ன ஓடைப்பட்டியைச் சேர்ந்த கோ.சங்கிலி என்பவர் திருச்செந்தூர் கோயிலின் அறங்காவல் குழுவில் இருந்தார். அதன் பின்னர் கோயில் நிர்வாகத்திற்கும், பள்ளர்களுக்குமான உறவுகள் முற்றிலும் அறுந்துப் போய் விட்டது. இருப்பினும் வரலாற்றுத் தொடர்புகள் சில உரிமைகளை நிலை நாட்டிக் கொண்டு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முருகனுக்குப் பிடிக்கப்படும் வெண்கொற்றக் குடையும், இரண்டு சேவல் கொடியும் திருச்ன்சென்தூர்க் கோயிலில் இருந்து தெருச்செந்தூர் பட்டிக்கு கொடுத்து விடப்படும். அவ்வாறு இறுதியாகக் கொடுத்து விடப்பட்ட வெண்கொற்றக் குடையிலுள்ள வெண்கல கலசமும், இரண்டு சேவை கொடியும் திருச்செந்தூர் பட்டியிலுள்ள அம்மன் கோயிலில் தான் இன்றும் உள்ளது. உடையார் குளம், வடக்குக் காரசேரி, ஒனாகுளம், சிங்கத்தாங்குறிச்சி, ஆலந்தா, வல்லநாடு, நாணல்காடு, முத்தாலங்குறிச்சி, முறப்பநாடு, படுகையூர், காசிலிங்காபுரம், அனைவரதநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து பள்ளர்கள் காவடி கட்டித் திருச்செந்தூர்பட்டியில் ஒன்று கூடி அங்கிருந்து திருச்செந்தூர் சென்று மேற்கு வாயில் வழியாகச் சென்று முருகனை வழிபட்டு வந்தனர். அதன் பின்னர்தான் மேற்கு வாயில் அடைக்கப் பட்டது.

    "பழம்பெரும் கோயில்களின் மேற்கு வாயில்,பாண்டிய மன்னர்களும் அவர் தம் மரபினரும் வருகின்ற வழியாதலால் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்த போது கோயில்களின் மேற்கு வாயில்கள் மூடப் பட்டன. அதிகாரத்தை இழந்ததால் பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கும் கோயில் நுழைவு மறுக்கப் பட்டது" என்ற வரலாற்று அறிஞர் இரா.தேவ ஆசீர்வாதத்தின் கூற்று முற்றிலும் உண்மை என்பது இக்கோயில் வரலாற்றால் உறுதி செய்யப் படுகிறது.

    திருச்செந்தூர்க் கோயிலின் மேலக் கோபுர வாயிலும் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்தபோது இழுத்து மூடப் பட்டுள்ளது. மேற்கு வாயில் பகுதியில் உள்ள தூண்களில் குடும்பன் பெயர் தாங்கிய பல கல்வெட்டுப் பொறிப்புகள் காணப்படுகின்றன. மேலக் கோபுர வாயிலில் அமைந்துள்ள தெருவிக்குக் கோட்டைத் தெரு என்று பெயர். இத்தெருவில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்குப் பாத்தியப் பட்ட பத்து பழம் பெரும் மடங்கள் அமைந்துள்ளன. திருச்செந்தூர்ப் பகுதியைச் சுற்றியுள்ள பள்ளர் குலத்தாரின் கிளைப் பிரிவினர் ஒவ்வொருவருக்கும் ஒரு மடம் என்ற கணக்கில் பத்து பெருமடங்கள் உள்ளன. கோயிலின் மேற்கு வாயிலிலிருந்து கோட்டைத் தெரு வழியாக வரும் போது முதலாவதாக 'அஞஞாப் பள்ளர்' மேடம் உள்ளது. அதன் கீழ்ப்புறம் 'வாதிரியப் பள்ளர்' மடமும், 'சோழியப் பள்ளர்' மடமும் சேர்ந்தார்ப் போல் உள்ளது. அதன் கீழ்ப்புறம் 'வங்கப்பள்ளர்' மடம் உள்ளது. அடுத்ததாக 'அளத்துப் பள்ளர்' மடமும், அதன் கீழ்ப்புறம் 'கொற்கை நாட்டார்( பள்ளர்)' மடமும் உள்ளது. அதற்க்கடுத்ததாகப் 'பருத்தி கோட்டை நாட்டார் (பள்ளர்)' மடமும், 'சீவந்திவள நாட்டார் (பள்ளர்)' மடமும், 'வீரவள நாட்டார் (பள்ளர்)' மடமும் உள்ளன. ஒவ்வொரு மடமும் அரைக்குறுக்கத்திற்கு மேல் பரப்புக் கொண்டதாகச் சுற்றுசுவர் கட்டப் பட்டுள்ளது. இவற்றில் ஐந்து மடங்கள் பயன்பாட்டிலும், நான்கு மடங்கள் பாழடைந்த நிலையிலும் இருக்கின்றன. வீரவள நாட்டுப் பள்ளர் மடத்திற்கு வடபுறம் அருகே இருந்த ஒரு பள்ளர் மடம் மற்றவர்களுக்கு விற்கப் பட்டு மடம் இருந்த சுவடு தெரியாமல் அவ்விடம் வீடுகளாகிப் போயின. கோட்டைத் தெருவின் முடிவில் வண்டிகள் நிறுத்துவதற்காக இருந்த பள்ளர்களுக்கு உரிமையுடைய நிலங்கள் பின்னாளில் பறையர்களுக்கு கையளிக்கப் பட்டது. இது தமிழர்களாகிய பள்ளர்களையும், பறையர்களையும் மோத விட்டு பிரித்தாளும் வடுகச் சூழ்ச்சியாகும்.































    இக்கோயிலின் மேற்கு வாயில் ஆண்டிற்கு ஒருமுறை முருகன், தெய்வானை திருமணம் நடைபெறும் காலத்தில் மட்டும் திறக்கப் படுகிறது. திருப்பரங்குன்றத்தில் தற்போதும் நடைமுறையில் உள்ள முருகனுக்கும், தேவேந்திரனின் மகள் தெய்வானைக்கும் திருமணம் முடிந்து தேவேந்திர குல வேளாளர் மண்டபத்திற்கு மறு வீடு செல்லும் வழக்காறு திருச்செந்தூர்க் கோயிலில் வழக்கொழிக்கப்பட்டுள்ளது.

    கால ஓட்டத்தில் பள்ளர் குலத்தவர்கள் இக்கோயில் உரிமைகளில் நாட்டம் செலுத்தாததாலும், பலர் கிருத்துவம் தலுவியதாலும், நாடர்களாகிய 'சாணார்' சமூகத்தவர்கள் இக்கோயிலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். இதற்க்கு இவர்களின் சமூக எழுச்சியும், பொருளியல் மேம்பாடும், அரசியல் அதிகாரப் பகிர்வும் அடிப்படையாய் அமைந்திருந்தது. இக்கோயிலில் பள்ளர் குலத்தவர்கள் முதல் மரியாதை இழந்து, முற்றிலும் உரிமைகள் பறிக்கப் பட்ட போதிலும் இக்கோயில் பள்ளர்களுக்கு மட்டுமே உரிமை உடையதேன்பதும், பள்ளர் குலத்தவர்களே பாண்டிய மரபினர்கள் என்பது இக்கோயில் சொல்லும் வரலாறு உண்மையாம்.

தென்காசி கோயிலும், தென்பாண்டி வேந்தர்களும்

தென்காசி கோயிலும், தென்பாண்டி வேந்தர்களும்


       திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலத்தின் அருகே பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது தென்காசி. இங்கே பாண்டியர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இக்கோயிலின் ஆய்வினூடாகவும் பள்ளகளே பாண்டியர் என்று அறிய முடிகிறது.
'காசி கலியன்' என்ற பெரும்புலவர் பாடிய பாக்கள் தென்காசி கோயிலில் கல்வெட்டுகளாக உள்ளன. அதில்....
"சீர்கொண்ட செங்கமலை வாழத் திரையாடைப்பார்கொண்ட வாள்வீர பாண்டியன் என்று - ஏர்கொண்டகானுலா மாலைக்கன குமகுடம்பு னைந்தான் மாணவே லானபிரா மன்" (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.80 )

      அபிராம பாண்டியன் போருக்கு செல்கின்ற போது அவனது வாளையும், வெண் கொற்றாக்குடையினையும் பாராட்டுகின்ற புலவர் ஏர்கொண்ட பாண்டியன் என எடுத்துரைப்பது பாண்டியர்கள் பள்ளர்களே என்பதை உணர்த்துகின்றது.

பராக்கிரம பாண்டியன் மெய்க்கீர்த்தியில்
" சிவநெறி யோங்கச் சிவாற்சனை புரிந்துமருது ராற்கு மண்டப மமைத்து"  (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.89  )


எனவரும் அடிகளில் மருதூரார்களான மள்ளர்கட்கு - பள்ளர்கட்கு மண்டபமமைத்த செய்தி இடம் பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. பராக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், அதிவீரராம பாண்டியன், வரதுகராம பாண்டியன், வரகுணராமன், குலசேகரன்,வரகுணராம பாண்டியன் உள்ளிட்ட பல பாண்டிய மன்னர்களில் பெயர்களைக் கல்வெட்டில் அறிய முடிகிறது.

   கலியுக ஆண்டு 4558ன் மேல் கார்த்திகை மாதம் 5ஆம்  நாள் (கி.பி. 1457 ) தென்காசிக் கோயிலில் பராக்கிரம பாண்டியன் கோபுரம் அமைக்கக் கால்கோளிட்ட செய்தியைப் பாடலாக வடித்துத் தந்துள்ள கல்வெட்டில்,

"செந்நெல் வயல் தென்காசி நகரில்நற்காத்திகைத் திங்கள் தியதி ஐந்தில்........................................................திருக்கோபுரம் காணத் துடியிடையாய்உபான முதல் தொடங்கினானே" (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.31  )என்று தென்காசி நகர் செந்நெல் வயல் சூழ்ந்த செந்நெல் முதுகுரியினரான மள்ளர்களின் - பள்ளர்களின் ஊர் என்பது உணர்த்தப் படுகிறது.
    கோபுரத்தை கட்டுகின்ற வேளையில் பராக்கிரம பாண்டியன் பகை அரசர்களின் படையெடுப்பையும், உள்நாட்டுப் போர்களையும், கருவூலத்தில் போதிய பொருளின்றி நிலைகுலைந்து போனதாலும் கோபுரத்தை அவனால் முழுமையாகக் கட்டி முடிக்க முடியவில்லை.

     இம்மன்னனுக்குப் பின்னர் ஆண்ட பொன்னின் பெருமாள் அழகன் குலசேகரன் சக ஆண்டு 1518 இல் இக்கொபுறப் பணியை நிறைவு செய்தான். இவனுக்குப் பின் கி.பி.16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிவீரராம பாண்டியன், கி.பி 1564 இல் முடி சூடினான். இவனுக்குப் பின் கி.பி.1588 இல் துங்கராம பாண்டியன் முடிசூடி அரசாண்டான். இவன் சிறந்தத் தமிழ் புலவனாகவும் திகழ்ந்தான். இவனுக்குப் பின்னர் கி.பி.1618 இல் வரகுணராம குலசேகரன் அரசுக் கட்டிலில் அமர்ந்தான். அதனைக் கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

    இம்மன்னனுக்குப் பின் கி.பி.1748 இல் வகோன்ராமப் பாண்டியனின் மகன்கள் தங்களுக்குள் முரண்பாடு கொண்டு தென்காசி நகரில் கீழக் கோட்டையிலிருந்தும், மேலக் கோட்டையிலிருந்தும் ஆட்சி புரிந்தனர். இவர்களுக்குள் இருந்த பகையைப் பயன்படுத்திக் கொண்ட வடுக வந்தேறிகள் இவர்களைச் சுரங்கப்ப் பாதை வழியாகச் செல்ல வைத்து வஞ்சமுடன் கொன்று ஒழித்தனர்.

    முகமதியர்கள் தென்காசியக் கைபற்றி ஆட்சி செய்த பின்னர் முழுமையாக நாயக்கர் ஆட்சிக்குட்பட்டது தென்காசி. பாண்டியர்கள் வலிமை குன்றிய பின் உரிமை முறை பற்றிய ஓலைச் சுவடிகளைக் கோயில் கோபுரத்தில் ஒளித்து வைத்தனர். இதனை அறிந்த வடுகர்கள் கோபுரத்தையே தீவைத்துக் கொளுத்தினர். கி.பி.1771 ஆம் ஆண்டு தென்காசியில் பாண்டியர்களின் ஆவணங்கள் நெருப்பிற்கு இரையாக்கப் பட்டு அழிக்கப்பட்டதாகத் திருநெல்வேலி வரலாற்றுக் குறிப்பு என்ற நூல் கூறுகிறது. (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.36  )

     பிறிதொரு குறிப்பு 25 .03 .1814 ஆம் ஆண்டு தென்காசி கருவூலத்தைக் கைப்பற்றும் வகையில் பாளையக்காரன் (நாயக்கன்) ஒருவனால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது என்கிறது. (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.36  )

     சென்கி என்ற மேலை நாட்டு கிருத்தவ போதகர் தனது கி.பி.1729 ஆம் ஆண்டையக் குறிப்பேட்டில், தென்காசிக் கோபுரமும், அதன் மேலுள்ள கடிகாரமும் நன்றாக உள்ளது என்று பதிவு செய்துள்ளார். அனால் கி.பி.1824  இல் நிலம் அளக்கும் அளவர் குறிப்பில் தென்காசிக் கோபுரம் தீவைக்கப் பெற்று அழிந்து பரிதாபமாகக் காட்சி தருவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.36  )

     இடியும், மின்னலும் கோபுரத்தைத் தாக்கி அழித்ததாகப் பின்னாளில் கட்டுக் கதைகள் வடுகர்களாலும், வடுகர்களுக்கு வாலுருவும் ஒரு சில புல்லுருவிகளாலும் புனையப் பட்டுக் கற்பிக்கப் பட்டன. உண்மைகளை உறங்கப் போடலாம்,. ஒருபோதும் கொள்ள முடியாதல்லவா? மள்ளர் குல மாமன்னன் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் உருவாக்கப் பெற்ற கோபுரம், 'பாண்டியர் மரபினராகிய பள்ளர்களின் ஆட்சி' மீண்டும் இந்த மண்ணில் வந்து விடக் கூடாது என்னும் வடுகச் சூழ்ச்சியினால் சாம்பலாக்கப் பட்டது.

     தென்காசி கோயிலில் தேரோட்டும் உரிமை நன்னகரம் பள்ளர்களுக்கு இருந்தது. கால ஓட்டத்தில் இவ்வுரிமை மறுக்கப் பட்டு வழக்கொழிப்பு செய்யப் பட்டது. நன்னகரத்தை சார்ந்த பள்ளர்குலத்தவரான சுடலைமாடன் மகன் இசக்கி முத்து என்பவர் ஆண்டுதோறும் தென்காசி கோயிலுக்கு நாள்கதிர் கொண்டு செல்லும் வழமை இன்றுவரை நடப்பிலிருந்து வருகிறது.

     தென்காசிப் பாண்டியர்களின் மரபறிய முடியாதவாறு வடுகர்கள் அடையாள அழிப்பு வேலைகளைச் செய்த போதிலும், இன்றளவும், முன்னமே பதிவு செய்துள்ள தென்காசி, செங்கோட்டைப் பகுதி வாழ் பள்ளர்களின் நில ஆவணங்களில் 'பாண்டிய குல விவசாயம்' என்ற பதிவுகளும், பள்ளர்கள் யாவரும் தங்களின் பெயரின் பின்னொட்டாகப் 'பாண்டியன்' என்னும் தமது குடிப் பெயரினை இணைத்து இடும் மரபும், தங்களை 'பாண்டியர் சமுதாயம்' என அழைத்துக் கொள்ளும் வளமையும் மெய்மை வரலாறுகளை உலகறியச் செய்யும்.